தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
 - எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
 
- தீதும், நன்றும், பிறர் தர வாரா;
 - தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
 
- நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
 - துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
 
- சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
 - செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
 
- இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
 - வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
 
- இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
 - மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
 
- வானம் தண் துளி தலைஇ ஆனாது,
 - வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
 
- கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
 - கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
 
- நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
 - அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
 
- முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
 - முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
 
- காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
 - அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
 
- பெரியோரை வியத்தலும் இலமே!
 - பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
 
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
 - சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]
 - 
 - நன்றி: http://vasantruban.blogspot.com/2012/03/blog-post.html?spref=bl
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
Gita tamil mp3 download @ http://vasantruban.blogspot.com also very nice
ReplyDeleteவாழ்க்கையில் உயர்வு,தாழ்வு, இன்பம், துன்பம் அனைத்திற்கும் நாமே காரணம்
ReplyDelete