Saturday, April 28, 2012

மணிமேகலை : பொன்னியின் செல்வனில்


மணிமேகலை என்றதும் பொதுவாக நம் நினைவுக்கு வருவது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீத்தலை சாத்தனாரின் படைப்பு. ஆனால், எனக்கு அது பொ.முவில் (பொன்னியின் செல்வன் படிப்பதற்கு முன்). பொ.பியில் (பொன்னியின் செல்வன் படித்த பின்) நினைவுக்கு வருவது யாரெனில், பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் அறிந்த கதாப்பாத்திரமான மணிமேகலை.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனில் மனதில் பதிவதாகிய எத்தனையோ முக்கியக் கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. பொன்னியின் செல்வர், வந்தியத்தேவர், குந்தவை, நந்தினி முதலானோர் கதையின் கருவிலே பயனித்தவர்கள். மணிமேகலை ஒரு மிக முக்கியமல்லாத கதாப்பாத்திரமாயினும், நம் நெஞ்சைத் தொட்டக் கதாப்பாத்திரங்களுள் மணிமேகலையும் ஒன்றாக இருக்கும். இங்கு அக்கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. அக்கதாப்பாத்திரம் நம் மனதில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.

அது என்ன விசேஷ தாக்கம்?. அன்பு.

அன்பு

''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்."

- எனும் பொய்யாமொழியின் படி, ஆர்வலராகிய வந்தியத்தேவரை மட்டுமல்லாமல் அதை வாசித்த என்னையும் புன்கண்ணீர் சிந்தவைத்த கதாப்பாத்திரம் அது. அன்பு, அதுவே கடவுளாகக் கருதப்படுவது. ஆனால் அதன் அறிதலும் புரிதலும் நம்மிடையே வித்தியாசப்படுகின்றது. 

சில அன்பு இரத்த உறவினால் ஏற்படுவது. காதலன்-காதலி, கணவன்-மனைவி ஆகியவர்களிடையே உள்ள அன்பு ஒருவரிடம் ஒருவர் கொண்ட எதிர்பார்ப்பினால் அமைவது. உறவுகளிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பு உண்டு. உலகில் மிக உன்னதமாகக் கருதப்படும் உறவாகிய தாய் தம் மக்களிடம் காட்டுகின்ற தன்னலம் பாராத எதையும் எதிர்பாராத அன்புக்கு ஈடு இணையில்லை என்றறிவோம். 

சில அன்பு இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட உறவால் அமைவது. நல்ல குருவுக்கும் சிஷ்யனுக்கும் ஏற்படுகின்ற அன்பில் குருவாவர் சிஷ்யனிடத்தில் எதையும் எதிபாராமல் அன்பு செலுத்துகின்றாராயினும், சிஷ்யன் குருவிடம் கல்வியாகிய பலன் வேண்டியே அன்பு செலுத்துகின்றான். நல்ல நண்பர்களிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பைக் காணலாம்.

இவையெல்லாவற்றையும் போல் சக மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும்  எதையும் எதிர்பாராத அன்பும் ஜீவகாருண்யமும் வள்ளலார் 'வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்வதாகிய அன்பும் மிக உன்னதமாக விளங்குகின்றன.

இவைகளில் உள்ளமைந்த  எதையும் எதிர்பாராத அன்பு இறைவனிடமிருந்தே இவ்வுறவுகளின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது. அது நம் உள்ளத்தை உருக்கி நெஞ்சத்தை நெகிழ வைக்கக்கூடியதாக அமைகின்றது. இத்தகைய அன்பையே மணிமேகலை வல்லத்தரையன் வந்தியத்தேவரிடம் வெளிப்படுத்தினாள் என்றால் அது மிகையாகாது. அது எவ்வாறு?

மணிமேகலையும் வந்தியத்தேவரும்

பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அறிந்திருக்கக்கூடியது வல்லத்தரையர் வந்தியத்தேவருக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் இடையேயான காதல். படிக்கும்போது (குறிப்பாக முதல்முறை படித்துக்கொண்டிருக்கும்போது) வாசகர்களாகிய நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இவர்களிடையேயான காதலாகிய அன்புதான். அதனால் அதனுடனேயே சித்தரிக்கப்பட்டிருந்ததாயினும் மணிமேகலை  வந்தியத்தேவரிடம் கொண்ட காதலின் முக்கியத்துவத்தை நாம் கதையின் இறுதியை அடையும்வரை உணர்வதில்லை.

குந்தவை தேவியைப்போலே நாமும் 'ஏன் இந்தப் பெண் இப்படி பிச்சியைப்போல் நடக்கிறாள்?' என மணிமேகலையைப் பற்றி எண்ணுகின்றோம். பின்பே, மணிமேகலைக்கு வந்தியத்தேவருடனான காதல், வெறும் காதலல்ல, எதையும் எதிர்பாரத தெய்வீகமான அன்பு என்று விளங்குகின்றது.

குந்தவையின் காதல்
நிச்சயமாய் குந்தவி தேவியார் வந்தியத்தேவரிடம் கொண்ட காதல் உன்னதமானதும் போற்றத்தக்கதாகும். எப்பேர்பட்ட பேரரசர்களும், அரச குமாரர்களும் குந்தவை பிராட்டியின் திருக்கரம் பற்றத் தவம் கிடக்கின்ற பொழுதும், என்றொ ஒரு காலத்தில் அரசாண்ட வாணர் குலத்தில் பிறந்தவரும், தன் தமையனார் ஆதித்த கரிகாலரின் கட்டளைக்கு பணி செய்வதுமாய் வல்லத்தரையன் வந்தியத்தேவரை அறிந்த பின்னரும், தான் கண்ட மாத்தரத்தில் இவை யாவையையும் பாராமல் அவன் மேல் காதல் கொண்டவள் குந்தவை தேவியார்.

பின்பு வந்தியத்தேவர் தம் சலன புத்தியால் சிறைப்பட்டபோதும்,

"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.! உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

என்று கூறிய வார்த்தைகள் தமிழராகிய நம் அனைவராலும் போற்றத்தக்கது. உன்னதமான தெய்வீகக் காதலின்  இலக்கணமாவது. பின்னர் அவரே தன் தமையனைக் கொன்ற பழிகொண்ட பின்னும், அவர் மேல் முழு நம்பிக்கை கொண்டு அவர்பால் பரிவு கொண்டவளாவாள்.

தெய்வீக அன்பு

ஆனால் மணிமேகலையின் அன்பு இவையெல்லாவற்றையும் விட ஒரு படி மேலானதே. எவ்வாறு?

தான் காணாவிட்டாலும் அண்ணன் கந்தமாறனின் தோழனைப் பற்றிய பேச்சுகளினால் வந்தியத்தேவர் மீது முதலில் வாஞ்சை கொண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தவள் மணிமேகலை. பின்பு அந்த அண்ணனே வந்தியத்தேவரை மறக்கச் சொல்லும்போது, நாடாளக்கூடிய இளவரசராகிய ஆதித்த கரிகாலரை மணந்து பிற்காலத்தில் சோழத்துப் பட்ட மகிஷியாகக்கூடய வாய்ப்பு இருந்தும், அதை மறுத்து, தான் நினைந்த வந்தியத்தேவர் மீதான அன்பு மாறாமல், அதற்கு முயற்சியும் செய்யாமல் மேலும் அதை ஆழமாக்கிக் கொண்டவள். பலர் அறிய அவள் உள்ளத்தை வெளிப்படுத்தத் தயங்கவும் இல்லை.

கள்ளம் கபடமற்ற குணத்தவளாய் நந்தினியிடமே தன் காதல் இரகசியங்களை வெளியிட்டு உதவி கேட்டவள், பின் ஏமாந்து, வந்தியத்தேவர் மேல் கொலைக்குற்றம் வந்தவுடன் அவரைத்தப்புவிக்க தானே அக்கொலையைச் செய்ததாக அழுதாள், புலம்பினாள், ஒரு பிச்சியைப்போல் அனைவரிடமும் மன்றாடினாள். அனைவரும் (நாமும்) அவளைப் பைத்தியமென்றே நினைத்தோம், 'ஏன் இவ்வாறு செய்கிறாள்?' என்று மயங்கினோம்.

பின் கந்தமாறன் வந்தியத்தேவரைக் கொன்றுவிட்டதாகப் பிதற்றியதும், முழுவதும் மனதொடிந்துப் போனாள்,அவ்வாறே நம்பி நிஜமாகவே பிச்சியானாள். நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலிலே,

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

எனக் பாடியதற்குத் தானும் இலக்கணமானாள். 

உதிர்ந்த மலரும் உதிராத அன்பு வடுவும்

"என் தங்கையை நீ மறந்துவிடு! பெரிய இடத்தில் அவளைக் கொடுக்கப் போகிறோம்!" என்று கந்தமாறன் சொன்னதும், வந்தியத்தேவர் உண்மையாகவே அவளை மறந்து விட முயன்றார். இளையபிராட்டியைச் சந்தித்ததும் அதற்குத் துணையாயிருந்தது. ஆனால் மணிமேகலையோ தன் மனத்தை மாற்றிக் கொள்ளவில்லை; மாற்றி கொள்ள முயலவும் இல்லை. அந்தப் பேதைப் பெண் மணிமேகலை! அவள் எதற்காக வந்தியத்தேவரிடம் இத்தகைய தெய்வீகமான அன்பு வைக்க வேண்டும்? இவரைக் காப்பாற்ற வேண்டிக் கொலைக் குற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள ஏன் முன் வரவேண்டும்? ஏன் இப்படிப் பைத்தியமாக வேண்டும்? அதனால் தனியே பிரிந்து, அலைந்து, மலருடல் மெலிந்து ஏன் மடியும் நிலைக்குப் போகவேண்டும்? அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு; தன் உயிர் நீக்கியும் தன் அன்பரைக் காக்க வேண்டித் துணிந்த தெய்வீக அன்பு. என்னே இந்த அன்பின் உன்னதம்? 

வந்தியத்தேவர் மீண்டும் அவளை அந்த மரணத் தருவாயில் வந்து பார்த்த போது, அவள் அவரைச் சொர்க்கத்தில் காண்பதாக அவள் எண்ணியதும், அந்நிலையிலேயே தன் உயிரை உகிர்த்ததுமாகிய அன்பு வந்தியத்தேவரை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் உருக்கி, நெஞ்சத்தை நெகிழ வைத்தது; நம் மனத்திலும் பெரும் பாரத்தையும், அன்பு வடுவையும் ஏற்படுத்தி நம் (குறிப்பாக என்) கண்களிலும் சிறுதுளிக் கண்ணீர் வரச்செய்த்து.

வாழ்க அமரர் கல்கி புகழ்

அமரர் கல்கியின் மணிமேகலை கதாப்பாத்திரம் உண்மையோ கற்பனையோ நான் அறியேன். அறிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் அக்கதாப்பாத்திரம் உண்மையிலேயே நம் மனதைத் தொட்டது; பதிந்தது. இவ்வகையில் சிறியது முதல் மிக முக்கியக் கதாப்பாத்திரங்கள் வரைக்கும் மிக நுணுக்கமாகச் செதுக்கி விளக்கமாக வழங்கிய அமரர் கல்கியின் திறனை என்னவென்று பாராட்டுவது! அவரின் இத்தகு படைப்பாற்றலுக்கு ஈடு இணையில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் படிப்பினையாகவும் மானசீக குருவாகவும் அமைந்துள்ள அமரர் கல்கியின் புகழ் வாழ்க பல்லாண்டு!

Thursday, April 19, 2012

பல்லவ குலம் - கடல் தந்த குழந்தை

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் படிக்கின்றபோது 'கடல் தந்த குழந்தை' என்ற அத்தியாயத்தில் அறியக்கிடைத்த பெருமை மிகு பல்லவ குலம் பற்றிய அற்புதமான தகவலைத் தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.. :)



"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது. "மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே! அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே!" என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள். அப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, "கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும்! இதை நான் கனவிலே கண்டேன்!" என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.

ஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது! கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன! ஆ! என்ன பயங்கரம்! தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே! சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே! புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே!

கப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள்.

அத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல; நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம்! நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம்! நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன? இல்லை, சூரியன் இல்லை; சின்னஞ்சிறு குழந்தை அது! பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம்! அத்தனை தேஜஸ்! ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா? ஒருவேளை...? ஆகா! இருக்கிறது; உயிர் இருக்கிறது! புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது 'களுக்' என்று சிரிக்கிறது!

படகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட்டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது! படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.

கரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது; கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள். தீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, "நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான்! இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்" என்று கூறுகிறார்; ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.

திரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், 'இளந்திரையன்' என்று பெயர் இடுகிறார். "தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்" என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வெளிவருகிறது. வடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் 'பல்லவராயன்' என்று நாமகரணம் செய்கிறார். அதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் 'போத்தரையன்' என்று பெயர்த்துக் கூறுகிறார். கவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். "இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா? 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான்!" என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.

பிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. "கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான்! சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்!" என்று கற்பனை செய்து கூறுகிறார்கள். வடமொழி புலவர்களோ, "பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்!" என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.)

பல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது; அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.

பல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது.


மகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார்."


Tuesday, April 17, 2012

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு



மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்:


1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு


உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு:

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)


மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.

1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்


மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்

1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி




இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.


இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்

01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி


இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்:

01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)



சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில:

அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரியக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை



இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.



இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன்.



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.


மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.


பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்:

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்



பெண் அதிகாரிகள்:


அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்.  சபைக்குரிய அலுவலர்கள் பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன் கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.


கணக்கன்: 
சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க்கணக்கன்: கணக்கனுக்கு உதவி செய்பவன்.

பாடி காப்பான்: கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.

தண்டுவான்: கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.

அடிக்கீழ் நிற்பான்: ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.


சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்

மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா?
இதோ அரசின் வருவாய்க்காண 'வரி'கள்:
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை

சோழர்கால கப்பல்கள்:


கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும்

கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்:

மேச ஞாயிறு - சித்திரை மாதம்
ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
கடக ஞாயிறு - ஆடி மாதம்
சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
மகர ஞாயிறு - தை மாதம்
கும்ப ஞாயிறு - மாசி மாதம்
மீன ஞாயிறு- பங்குனி மாதம்


சோழர் கால இலக்கண நூல்கள்:

தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்
சோழர் கால நிகண்டு
பிங்கலந்தை

சோழர் கால ஏரிகள்:

செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்
மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
பொன்னேரி - ஜெயங்கொண்டம்
வீரநாராயண பேரேரி- வீராணம்
திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
கவீர ஏரி ( கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை

சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்:

பழவேற்காடு
சென்னப்பட்டினம்
மாமல்லை
சதுரங்க்கப்பட்டினம்
வசவ சமுத்திரம்
மரக்கானம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
காவேரிப்பூம்பட்டினம்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம்
முத்துப்பேட்டை
தொண்டி
தேவிப்பட்டினம்
அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
இராமேசுவரம்
பெரிய பட்டினம்
குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி
கொற்கை
காயல்பட்டினம்
குமரி.


உலகளந்தான் கோல்:


சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.



எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.


உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:

24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.


இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்:


இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.



பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.



உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.


காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது 

நன்றி: மினிஷ் (பொன்னியின் செல்வன் Yahoo Group  ponniyinselvan@yahoogroups.com) மற்றும் விக்கி..

Sunday, April 15, 2012

பொன்னியின் செல்வன் : முதல் அனுபவங்கள்



அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்து முடித்து வாரங்கள் இரண்டு ஆகியும் அதைப்பற்றிய என் அனுபவங்களைப் பகிராதது கொஞ்சம் குறையாகவே இருந்து வந்தது.. இப்போது அதற்கான வேளை வந்தது.. முதல் முறை நமக்கு ஏற்படுகிற இனிய அனுபவங்கள் என்றும் நம் மனதில் பசுமறத்தாணி போல பதியும். பொன்னியின் செல்வனுடன் அத்தகைய என் அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்தகங்கள் படிப்பது எனக்கு பிடித்ததாயினும் ஏனோ தமிழ் வறலாற்றுப் புதினங்களைப் படிக்க சில மாதங்கள் முன்பு தான் காலம் கனிந்தது. அதற்கான அடித்தளம் ஒரு வருடம் முன்பே என் நண்பன் மூலம் எனக்கு ஏறபட்டது. பொன்னியின் செல்வன் வாசித்தது பற்றிய தன் அனுபவங்களை அவன் பகிரும்போது எனக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.

ஆனால், மதுரை மின் பதிப்பு வளைதளத்தில் (project madhurai) மின் புத்தகமாய் கிடைக்கும்போது அதை விடுவானேன் என்று இருந்தது எத்தகைய பிழை என்று ஆறு மாதங்களுக்கு முன் பொன்னயின் செல்வனை வாசிக்கத் தொடங்கிய பின்பே உணர்ந்தேன். முக்கியமாக பொன்னியன் செல்வன் மின் பதிப்பை வாசிப்பதற்காகவே கிண்ட்ல் மின் புத்தகக் கருவியை (Kindle e-book reader) என் அண்ணா மூலம் யூ.எஸ்.-லிருந்து தருவித்தேன். அதற்காக என் அண்ணாவுக்கு என் மிக்க நன்றிகள். பின்பு சென்னை புத்தக கண்காட்சியில் முல ஓவியங்களுடன் நல்ல பதிப்பாக விகடன் பதிப்பகம் வெளியிட்டதை தாமதமாகவே உணர்ந்தேன். அதை இனியாவது வாங்குவதற்கு எண்ணியிருக்கிறேன். அனால் அதுவரைக்கும் தாமதியாது 'கிண்ட்ல்' கருவி மூலமாகவே படிக்கத் தொடங்கி, படித்தும் முடித்துவிட்டேன்.

பொன்னியின் செல்வனை முதல் முறை படிக்கிற அனுபவமே தனி தான். அதை முதல் இரு அத்தியாயங்கள் வாசிக்கும்போதே உணர்ந்தேன்.அதன் சொற்சுவை, பொருட்சுவை, கற்பணைத்திறம் மற்றும் ஆழம், வருணணை நயங்கள், சுவாரசியம் மற்றும் காட்சியமைப்புகளின் திறமும் சுவையும் அளப்பரியவை. இத்தகு புத்தகத்தை இவ்வளவு நாள் வாசிக்காமல் இருந்தோமே என்று சிறிது வருந்தினேனாயினும், இப்போதாவது வாசிக்கத் தொடங்கினோமே என்று பின்பு மகிழந்தேன்.

பொன்னியின் செல்வனை வாசிக்கும்போது மற்ற வாசகர்கள் சொல்கிறது போலவே அக்கதாப்பாத்திறங்களோடும் அவ்வுலகத்தோடும் ஒன்றிவிடுவேன். அதிலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திறமாகவே மாறிவிடுவேன். கல்கியின் வருணணைகளால் அவர் கூறுகிற இடங்கள்  (பெரும்பாலானவை நாம் பார்த்தேயிறாதவை ) எனக்கு மிகவும் பரிட்சயமாகிவிட்டன. நம் கதாநாயகனான வல்லத்தரையன் வந்தியத்தேவன் சென்றவிடங்களெல்லாம் நானும் சேர்ந்து சுற்றிப்பார்த்தேன். கடம்பூர், குடந்தை, தஞ்சை, பழையாறை, மாமல்லபுரம், கோடிக்கறை, இலங்கை, நாகப்பட்டினம், திருவையாறு எல்லாம் நான் பார்த்துப் பழகிய இடங்களாகிவிட்டன. அமரர் கல்கியின் வருணணைகள் நம்மை அவ்விடங்களிலேயே அக்கதாப்பாத்திரங்களுடன் வாழ வைப்பதுடன் மேலும் நம்மையும் அக்கதாப்பாத்திரங்களாகவே வாழ வைத்திடுகின்றன.

கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கோடிக்கறை. அவ்விடத்தின் வருணணைகளும், அங்கே பூங்குழலி மான் போல் சுற்றித்திரியும் வருணணைகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்தவை.

பொன்னியின் செல்வனில் என்னை மிகக் கவர்ந்தது அமரர் கல்கியின் சுவாரசியமாக கதை சொல்லுகிற விதம். படிக்க அமர்ந்துவிட்டால் நம் நேரம் போவதே தெரியாமல் கதையோடு ஒன்றிவிடுவோம். 'சுவாரசியத்தின் சாகரம் பொன்னியின் செல்வன்' என்று சொன்னால் அது மிகையாகாது. சில சமயம் நல்லிரவில் தூக்கத்தையும் மறந்து படித்துக்கொண்டிருப்பேன், அல்லது படிக்கும்போதே இரவு நேரமாகி தூங்கிவிட்டிருப்பேன். படிக்கிற பக்கங்கள் ஒரு அளவாகவே தெரியாது. சில சமயங்களில் சுவாரசிய மிகுதியால் நூறு நூற்றைம்பது பக்கங்கள் கூட ஒரே நாளில் படித்துத் தள்ளியிருக்கிறேன். சில சமயங்களில் காட்சிகளின் வரிசையை மாற்றியமைத்துச் சொல்லியிருப்பது சுவாரசியத்தை மேலும் கூட்டுயிருக்கின்றது. அமரர் கல்கியின் கதை சொல்லுகிற விதம் மற்ற எல்லா கதாசிறியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்  மேலும் திரைப்பட இயக்குனர்களுக்கும் மிகச்சிறந்த படிப்பினையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. கதையில் வரும் சிறியது முதல் மிக முக்கியக் கதாப்பாத்திறங்கள் வரை மிக நுணுக்கமாகக் கையாண்டிருக்கும் திறமை அளப்பரியது.

கதையில் எனக்கு மிகப்பிடித்த கதாப்பாத்திறங்கள்
*  'பொன்னியின் செல்வர்'-ஆகிய அருள்மொழி வர்மர் - காரணம் அவரின் சொல், சிந்தனை, செயல் ஆகியவற்றின் மேன்மை.
* வல்லத்தரையன் வந்தியத்தேவன் -அவனின் துணிச்சல் மற்றும் எத்தகு சோதனைக்காலங்களிலும் அவன் குறும்புத்தனம் நம்மை புன்னகைக்க வைப்பது.
* நந்தினி - அவளின் சொல் மற்றும் செயல்களின் உள்ளர்த்தங்களை அறிவது மிகப் புதிரானது.
*  குந்தவை - அவளின் சொல் மற்றும் செயலின் தெளிவு மற்றும் "உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..." என்று வாணர் குலத்து வீரருடனான அன்பு.
* பூங்குழலி - அவளின் துணிச்சலான அதே சமயத்தில் புதிரான குணம்.
* சேந்தன் அமுதன் - அவனின் பக்தியும், எதையும் எதிர்பாராத உயர்குணம்.
* வானதி - அவளின் பால்மனம் மாறாத குணம் மற்றும் அருள்மொழி வர்மர் மீதான நெஞ்சுரம் மிக்கக் காதல்.
* ஆழ்வார்க்கடியானின் ஒற்றுத்திறன் மற்றும் சமயோஜித செயல்கள்
* மணிமேகலை - காரணம் அவளின் எதையும் எதிர்பாராத, உள்ளம் உருகி நெஞ்சை நெகிழ வைத்த, வந்தியத்தேவன் மீதான உண்மை அன்பு.


கதையில் எனக்கு மிகப்பிடித்த பாகம் சொல்லவே தேவையில்லை- ஐந்தாம் பாகம். நம்மைப் புரட்டிப் போடுகிற பாகம் இதுவென்றால் மிகையாகாது. விறுவிறுப்பின் உச்சகட்டமான பாகம். அதைப்படிக்கத் தொடங்கும்போது அங்கு சோழ நாட்டில் அடிப்பதாகச் சொல்லப்படுகிற பெரும்புயல் நம் உள்ளத்திலும் வீசத்தொடங்கிவிடுகிறது. பின்பு இறுதியில் பொன்னியின் செல்வரின் தீரச்செயலின் பின் எல்லாம் அமைதிப்படுகிறது. இருந்தாலும் இறுதியில் இருக்கும் சிறு நெருடல்கள் அமரர் கல்கியின் முடிவுரையால் தீர்ந்து போகிறது.


அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனும் அதன் பெருமையிலும் புகழிலும் தமிழர்களின் அபிமானத்திலும் அமரத்தன்மை வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. படிக்காதவர்கள் தவறாமல் படியுங்கள், படித்தபின் நீங்களே தவறாமல் மறுபடியும் படிப்பீர்கள். தமிழில் உங்கள் சொல், சிந்தனை, மொழித்திறம் மற்றும் பற்று மெருகேறியிருப்பதை கண்கூடாய் உணர்வீர்கள். வறலாற்றுப் புதினங்களின் மீதான தாகம் தாமாகவே அதிகரித்திருக்கும். அதன் விளைவாகவே இப்போது அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி, பார்த்திபன் கனவு ஆகிய புதினங்களை முடித்துவிட்டு சிவகாமியின் சபதத்தையும் தொடங்கியிருக்கின்றேன். இந்த வாசகப்பயணம் மேலும் மேலும் தொடரும் என்பது உறுதி.. நன்றி..


முழுக் கதையுள்ள வலைதளம்- பொன்னியின் செல்வன் - தமிழ் விக்கி
தறவிறக்கத் தளம் - மதுரை தொகுப்பு
ஆன்ட்ராய்டு - மென்பொருள் 

Thursday, April 12, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய மூத்தவன்

உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்

கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.

மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.

அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,

கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி   தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்

மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்

வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்

வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!

தமிழனாய் வாழ்வோம்
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!

நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.

Friday, April 6, 2012

முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)



இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான். இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030 வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது. வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.


நன்றி: 'ஃபேஸ்புக் இடுகை..'

இதுவரை வெளியாகியுள்ள வரலாற்றுப் புதினங்கள்

நன்றி: http://tamilhistoricalnovel.blogspot.in/2012/01/blog-post_25.html
01. அதியமான் காதலி - அய்க்கண்

02. இளவெயினி- அய்க்கண்

03. கரிகாலன் கனவு- அய்க்கண்

04. நெய்தலில் பூத்த குறிஞ்சி - அய்க்கண்

05. நெல்லிக்கனி - அய்க்கண்

06. ஊர்மிளை - அய்க்கண்

07. கயல் விழி-அகிலன்

08. வேங்கையின் மைந்தன்-அகிலன்

09. வெற்றி திருநகர் -அகிலன்

10. பொன் மயிலின் கதை - அமுதா கணேசன்

11. தஞ்சை இளவரசி - அமுதா கணேசன்

12. செஞ்சித் தளபதி - அண்ணாமலை . கே

13. குருதிச் சோறு - அண்ணாமலை .எம்

14. பல்லவன் பாவை - அண்ணாமலை .எம். கருப்பூர்

15. காஞ்சித் தாரகை - அனுஷா வெங்கடேஷ்

16. காவிரியின் மைந்தன்- அனுஷா வெங்கடேஷ்

17. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ்

18. கோப்பெருஞ்சோழர் – அரசு

19. பல்லவர் கதைகள் - அரசுமணி

20. இரும்பாரம் - அண்ணா

21. இரும்பு முள்வேலி - அண்ணா

22. கலிங்க ராணி - அண்ணா

23. கயல்விழி - அறிவு ஒளி தி.நா.

24. மூன்றாம் நந்திவர்மன் - அருளர் நம்பி

25. மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள் - அருளர் நம்பி

26. லங்கா ராணி – அருளர்

27. நீலமலை இளவரசி - அருண்

28. அமோகவர்ஷன் - அசோக்குமார் .வி

29. ஸ்வராஜ்யம் கண்ட அறுந்திறல் வீரன் - ஆனந்த் ஆதீஷ்

30. பாரி வள்ளல் - ஆர்த்தி

31. இலங்கை வேந்தன் எல்லாளன் - ஆழியான்

32. கடல் கோட்டை - ஆழியான்

33. கந்தவேள் கோட்டம் - ஆழியான்

34. குவேனி - ஆழியான்

35. நாகநாட்டு இளவரசி- ஆழியான்

36. நந்திக்கடல் - ஆழியான்

37. மகாராணியின் சபதம் - ஆறுமுகம் சுப்பு

38. டன் டனக்கான் கோட்டை - பாலகிருஷ்ணன்

39. செஞ்சிக் கோட்டை - பாலகிருஷ்ணன்

40. என்னருகில் நீ இருந்தால் - பாலகுமாரன்

41. மாக்கோலம் - பாலகுமாரன்

42. கடிகை - பாலகுமாரன்

43. கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்

44. இனிய யட்சிணி - பாலகுமாரன்

45. முதல் யுத்தம் - பாலகுமாரன்

46. நந்தா விளக்கு - பாலகுமாரன்

47. ஒருகாவல் நிவந்தம் - பாலகுமாரன்

48. உடையார் - பாலகுமாரன்

49. பாண்டிய நாயகன் - பாலசுப்ரமணியன் .ஆர்

50. சந்திர வதனா - பாலசுப்ரமணியன்

51. மோக மலர் - பாலசுப்ரமணியன்

52. பொன் அந்தி - பாலசுப்ரமணியன்

53. காளிங்கராயன் கதை - பாஸ்கர தாசன்

54. மாவீரன் மருதநாயகம்- பாஸ்கர தாசன்

55. தீரன் சின்னமலை - பாஸ்கர தாசன்

56. சந்திரமதி- பரதவன்

57. காஞ்சிப்பாவை - பரதவன்

58. நீலகேசி - பரதவன்

59. மதுரையைக் காத்த மறவன் - தயானந்தம் . அ

60. தீரன் சின்னமலை - தயானந்தம் . அ

61. குணவதிக் கோட்டம் - தயானந்தம் . அ

62. காவிரிச்சோழன் - தயானந்தம் . அ

63. மலர்விழி - தயானந்தம் . அ

64. மும்முடிசோழன் - தயானந்தம் . அ

65. வல்வில் ஓரி - தயானந்தம் . அ

66. கன்னிப்போர் - தீபா ராமமூர்த்தி

67. ராஜமயக்கம் – திலீபன்

68. ஹர்ஷவர்தணன் - துரோணன்

69. நாயகி நப்பின்னை - துரோணன்

70. ஆர்ய மலை - எழிலன்

71. சீதனம் - கணேசன்.சி. பேரை

72. அபிசீனிய அடிமை - கணேசன் .பி. சி

73. ஜீலம் நதிக்கரையில் - கணேசன் .பி. சி

74. கலைவென்ற காவலன் - கணேசன் .பி. சி

75. மாற்றான் தோட்டத்து மல்லிகை - கணேசன் .பி. சி

76. பாரசீக ரோஜா - கணேசன் .பி. சி

77. புலைச்சியின் கனவு - கணேசன் .பி. சி

78. சாம்ராஜ்யம் - கணேசன் .பி. சி

79. சோமனாதபுரத்து சிலை - கணேசன் .பி. சி

80. வாசவதா - கணேசன் .பி. சி

81. சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி

82. பைசாசம் - கோகுல் சேஷாத்ரி

83. ராஜகேசரி - கோகுல் சேஷாத்ரி

84. மதுர கவி (கல்வெட்டு சொன்ன கதைகள்) - கோகுல் சேஷாத்ரி

85. மாமல்ல நாயகன் - கௌரி ராஜன்

86. மாலவல்லியின் தியாகம் - கோபாலன் .கி. ரா.

87. அதியமான் கோட்டை- கௌதம நீலாம்பரன்

88. சித்திரப் புன்னகை - கௌதம நீலாம்பரன்

89. சோழ வேங்கை (நயன தீபங்கள்) - கௌதம நீலாம்பரன்

90. ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன்

91. காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள் - கௌதம நீலாம்பரன்

92. கலிங்க மோகினி - கௌதம நீலாம்பரன்

93. மந்திர யுத்தம் - கௌதம நீலாம்பரன்

94. மன்னன் மாடத்து நிலவு - கௌதம நீலாம்பரன்

95. மருதநாயகம் - கௌதம நீலாம்பரன்

96. மாசிடோனிய மாவீரன் - கௌதம நீலாம்பரன்

97. மோகினிக் கோட்டை / பல்லவ மோகினி - கௌதம நீலாம்பரன்

98. நிலா முற்றம் - கௌதம நீலாம்பரன்

99. பல்லவன் தந்த அரியணை - கௌதம நீலாம்பரன்

100. பாண்டியன் உலா - கௌதம நீலாம்பரன்

101. பூமரப் பாவை- கௌதம நீலாம்பரன்

102. புலிப் பாண்டியன் - கௌதம நீலாம்பரன்

103. ராஜகங்கனம் - கௌதம நீலாம்பரன்

104. ராஜபீடம் - கௌதம நீலாம்பரன்

105. ராஜபொக்கிஷம் - கௌதம நீலாம்பரன்

106. ராஜபுதன இளவரசி

107. சாணக்கியனின் காதல் / மூங்கில் பாலம் / வாசவதத்தையின் காதல் / வெற்றித்திலகம் - கௌதம நீலாம்பரன்

108. சேரன் தந்த பரிசு - கௌதம நீலாம்பரன்

109. சேதுபந்தனம் - கௌதம நீலாம்பரன்

110. சிம்மக்கோட்டை - கௌதம நீலாம்பரன்

111. உதய பூமி - கௌதம நீலாம்பரன்

112. வேங்கை விஜயம் - கௌதம நீலாம்பரன்

113. வெற்றி மகுடம் - கௌதம நீலாம்பரன்

114. விஜய நந்தினி - கௌதம நீலாம்பரன்

115. சிந்து நதிக்கரையினிலே – ஹசன்

116. எழுகரை சூர்யகாங்கேயன் - இடைப்பாடி அமுதன்

117. சோழ மாதேவி - இளங்காவின்

118. சோழர்குலச்செல்வி - இளங்காவின்

119. கடற்கரைக் காவியம் - இளங்காவின்

120. வெற்றித்திருமகள் - இளங்காவின்

121. விடுதலை வீரர் மருது பாண்டியர்கள் - இளங்காவின்

122. வம்ச மணி தீபிகை - இலசை மணியன்

123. கிரேக்க நாயகி – இளவரசன்

124. இதய ரோஜா- இந்து சுந்தரேசன்

125. இருபதாவது இல்லத்தரசி - இந்து சுந்தரேசன்

126. மதுரை அரசி - இந்திரா சௌந்தர்ராஜன்

127. பாண்டிய நாயகி - இந்திரா சௌந்தர்ராஜன்

128. சேது நாட்டு வேங்கை - இந்திரா சௌந்தர்ராஜன்

129. வைகை வனசுந்தரி- இந்திரா சௌந்தர்ராஜன்

130. விக்ரமா விக்ரமா - இந்திரா சௌந்தர்ராஜன்

131. மகுடம் கண்ட தென்னவன் - இந்திரா சுப்பிரமணியம்

132. பாரசீக பேரழகி - இந்திரா சுப்பிரமணியம்

133. ராசசிம்மன் - இந்திரா சுப்பிரமணியம்

134. வீரத்திருமகள்- இந்திரா சுப்பிரமணியம்

135. யாதவ ராணி- இந்திரா சுப்பிரமணியம்

136. காவியக் கனவு - இனியவன்

137. மா மதுரை பேரரசி - இருதயராஜ் .எம்

138. வேள் பாரி - இருதயராஜ் .எம்

139. அபரஞ்சி மகள் - இருகூரன்

140. ஆலவாய் அழகன் - ஜெகசிற்பியன்

141. அருள்மொழி நங்கை / வாருணி தேவி / பூசுந்தரி - ஜெகசிற்பியன்

142. கோமகள் கோவளை - ஜெகசிற்பியன்

143. மதுராந்தகி - ஜெகசிற்பியன்

144. மகர யாழ் மங்கை - ஜெகசிற்பியன்

145. மாறம்பாவை - ஜெகசிற்பியன்

146. நந்திவர்மன் காதலி - ஜெகசிற்பியன்

147. நாயகி நற்சோனை - ஜெகசிற்பியன்

148. பத்தினிக்கோட்டம் - ஜெகசிற்பியன்

149. சந்தன திலகம் - ஜெகசிற்பியன்

150. திருச்சிற்றம்பலம் - ஜெகசிற்பியன்

151. சந்திரகிரிக்கோட்டை - ஜனா

152. சுந்தரவல்லி - ஜானகி செல்வன்

153. அக்னிப்புயல் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

154. சோழ நாகம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

155. எகிப்திய ராணி - ஜெயந்தி ராஜன் / எல்லார்

156. இளைய ராணி - ஜெயந்தி ராஜன் / எல்லார்

157. கனல் பறவை - ஜெயந்தி ராஜன் / எல்லார்

158. மதுபிங்கலன் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

159. மண்ணின் மனம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

160. மண்ணின் மின்னல்கள் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

161. பாரசீகப்புயல் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

162. பெண்ணரசி - ஜெயந்தி ராஜன் / எல்லார்

163. ரோமியோ மகுடம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

164. ரோமியோ நெருப்பு - ஜெயந்தி ராஜன் / எல்லார்

165. சாம்ராட் அசோகன் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

166. சுகந்தா தேவி - ஜெயந்தி ராஜன் / எல்லார்

167. திட்டா தேவி - ஜெயந்தி ராஜன் / எல்லார்

168. வீர வேந்தன் சேரமான் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

169. வீரத்தின் விழுதுகள் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

170. வெற்றித் திருமகன் - ஜெயந்தி ராஜன் / எல்லார்

171. சங்கமித்திரை - ஜெயசங்கரன் .எஸ்

172. வர்மப்பறவை - ஜெயராஜ் .டி

173. வர்மவனம் - ஜெயராஜ் .டி

174. வர்மக்களம் - ஜெயராஜ் .டி

175. வேலு நாச்சியார் - ஜீவபாரதி .கே

176. விடுதலை வேங்கை - ஜெகதா

177. நான் மாடக் கூடல் நாயகன் - ஜார்ஜ் கோமகன்

178. பொதுகா தேவதை - ஜோசப் அதிரியன் ஆண்ட்ரோ.ஞ்

179. ஏழிசை வல்லபி - கபிலன் .வே

180. கோமகள் - கபிலன் .வே

181. கொற்றவை பந்தல் - கபிலன் .வே

182. கொற்றவன் கோட்டம் - கபிலன் .வே

183. மாமல்லன் காதலி - கபிலன் .வே

184. மதுராந்தகி - கபிலன் .வே

185. மலர் முகம்- கபிலன் .வே

186. மனக்குகை - கபிலன் .வே

187. மரகத தீபம் - கபிலன் .வே

188. மறவன் மகள் - கபிலன் .வே

189. மறவர் குலத்து மணிப்புறா - கபிலன் .வே

190. நாகநந்தினி - கபிலன் .வே

191. நந்திக் கலம்பகம் - கபிலன் .வே

192. நிலவின் நிழல் - கபிலன் .வே

193. நித்திலவல்லி - கபிலன் .வே

194. பல்லவர் கோமகன் - கபிலன் .வே

195. பாண்டியன் திருமேனி - கபிலன் .வே

196. பீலி வலை - கபிலன் .வே

197. பெருந்துறை நாயகன் - கபிலன் .வே

198. பொற்செல்வி - கபிலன் .வே

199. புலி நகம்- கபிலன் .வே

200. ராஜ நங்கை - கபிலன் .வே

201. சேர மாதேவி - கபிலன் .வே

202. சிலம்புச் செல்வி- கபிலன் .வே

203. வசந்த மண்டபம்- கபிலன் .வே

204. வசந்த பைரவி- கபிலன் .வே

205. வில்லவன் கோதை - கபிலன் .வே

206. மலர்ச்சோலை மங்கை - டாக்டர் கைலாசம் .எல்

207. கயல்- டாக்டர் கைலாசம் .எல்

208. பத்மவியுகம் - டாக்டர் கைலாசம் .எல்

209. மணிமகுடம் - டாக்டர் கைலாசம் .எல்

210. பொன்னிவனத்து பூங்குயில் - கலைமணி

211. தில்லானா மோகனாம்பாள் - கலைமணி

212. பாயும் புலி பண்டாரவன்னியன் - கருணாநிதி

213. பொன்னர் சங்கர் - கருணாநிதி

214. ரோமபுரி பாண்டியன் - கருணாநிதி

215. தென்பாண்டி சிங்கம் - கருணாநிதி

216. செல்வமணி - கலைவேந்தன்.கோ

217. பாண்டியன் செல்வி - கலியபெருமாள் .ஏ

218. சரபோஜி - கலியராஜன்.தி

219. பார்த்திபன் கனவு - கல்கி கிருஷ்ணமூர்த்தி

220. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

221. சிவகாமியின் சபதம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

222. சோலைமலை இளவரசி - கல்கி கிருஷ்ணமூர்த்தி

223. இடிந்த கோட்டை / மோகினித்தீவு - கல்கி கிருஷ்ணமூர்த்தி

224. தியாக பூமி - கல்கி கிருஷ்ணமூர்த்தி

225. ரவிகுல திலகன் - கல்கி ராஜேந்திரன்

226. வண்டார் குழலி - கல்கி ராஜேந்திரன்

227. அபிமானவல்லி - கல்கி ராஜேந்திரன்

228. சேதுபதி மன்னரும் ராஜ நர்தகியும் - கமால் எஸ்.எம்.

229. சேதுபதியின் காதல் - கமால் எஸ்.எம்.

230. கடல் மைந்தன் - கமலப்ப்ரியா

231. கொங்கு திலகம் - கமலப்ப்ரியா

232. மதுரவல்லி - கமலப்ப்ரியா

233. நாகமலை தீவு - கமலப்ப்ரியா

234. பொக்கிஷ வேட்டை - கமலப்ப்ரியா

235. ராஜ நந்தி - காண்டீபன்

236. நடுக்கல் நாயகன் - காண்டீபன்.கு

237. ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி - கண்ணதாசன்

238. கடல் கொண்ட தென்னாடு- கண்ணதாசன்

239. பாரி மலைக்கொடி- கண்ணதாசன்

240. சேரமான் காதலி- கண்ணதாசன்

241. ஊமையன் கோட்டை- கண்ணதாசன்

242. கடல் சிலந்தி - கண்ணன் எஸ் / கண்ணபிரான்

243. மதுரையை மீட்ட சேதுபதி - கண்ணன் எஸ் / கண்ணபிரான்

244. மாயபண்டியன் மகள் - கண்ணன் எஸ் / கண்ணபிரான்

245. ரோமபுரி வணிகர்கள் - கண்ணன் எஸ் / கண்ணபிரான்

246. சோழ வளநாட்டின் சூரியன் - கண்ணன் கிருஷ்ணன்

247. களப்பிறரை வென்ற காவலன் - கண்ணன் கிருஷ்ணன்

248. செப்பேடு தந்த செம்மல்கள் - கண்ணன் கிருஷ்ணன்

249. கந்தர்வா - கண்ணன் மகேஷ்

250. நீலமதியின் காதல் - கண்ணன் மகேஷ்

251. யயாதி - கண்டேகர்.வி.எஸ்.

252. செங்கனி - காவேரி நாடன்

253. களங்கண்ட இளஞ்சேரல் - கவியழகன்

254. காஞ்சி காவலன்- கவியழகன்

255. கோபெருந்தேவி - கவியழகன்

256. மாவீரன் புலித்தேவன் - கவியழகன்

257. மண் சிவந்தது - கவியழகன்

258. மன்னர் மன்னன் - கவியழகன்

259. மராட்டிய மாவீரன்- கவியழகன்

260. நர்தன நாயகி- கவியழகன்

261. நித்திலவல்லி- கவியழகன்

262. பல்லவ சிம்மன்- கவியழகன்

263. வண்டுவார் குழலி- கவியழகன்

264. வீர வேந்தன்- கவியழகன்

265. விடுதலை வேங்கை - கவியழகன்

266. கரிகாலன் காதலி - கூத்தன் சேத்தூர்

267. ராஜபோகம் - கௌசல்யா.ஜி

268. அடிமையின் தியாகம் - கௌசிகன்

269. ஜுலேகா- கௌசிகன்

270. பாமினிப் பாவை - கௌசிகன்

271. புலிக் குகை – கௌசிகன்

272. ஆதித்த கரிகாலன் கொலை - கோவி மணிசேகரன்

273. அக்னிக்கோபம் - கோவி மணிசேகரன்

274. அக்னி வீணை - கோவி மணிசேகரன்

275. அஜாத சத்ரு - கோவி மணிசேகரன்

276. அரண்மனை ராகங்கள் - கோவி மணிசேகரன்

277. அழகு நிலா- கோவி மணிசேகரன்

278. சித்ராங்கி- கோவி மணிசேகரன்

279. சோழ தீபம்- கோவி மணிசேகரன்

280. தேவ தேவி- கோவி மணிசேகரன்

281. எரிமலை - கோவி மணிசேகரன்

282. கங்கையம்மன் திருவிழா - கோவி மணிசேகரன்

283. கங்கை நாச்சியார் - கோவி மணிசேகரன்

284. வரலாற்றுப் புதினங்களின் தொகுப்பு - கோவி மணிசேகரன்

285. இளவரசி மோகனாங்கி - கோவி மணிசேகரன்

286. இந்திர விஹாரை - கோவி மணிசேகரன்

287. கவிஞனின் காதலி- கோவி மணிசேகரன்

288. கானல் கானம் - கோவி மணிசேகரன்

289. காளையார் கோவில் ரதம் - கோவி மணிசேகரன்

290. காந்தர்வதத்தை - கோவி மணிசேகரன்

291. காஞ்சிக்கதிரவன் - கோவி மணிசேகரன்

292. காந்தாரி- கோவி மணிசேகரன்

293. காவிய ஓவியம் - கோவி மணிசேகரன்

294. கழுவேரி மேடு - கோவி மணிசேகரன்

295. கொடுத்து சிவந்த கைகள் - கோவி மணிசேகரன்

296. கொல்லிப்பாவை - கோவி மணிசேகரன்

297. குடவாயில் கோட்டம் - கோவி மணிசேகரன்

298. குமரி/பேய்மகள் இளவெயினி/ஹைதரலி -கோவி மணிசேகரன்

299. குறவன் குழலி - கோவி மணிசேகரன்

300. குற்றாலக் குறிஞ்சி - கோவி மணிசேகரன்

301. மாவீரன் காதலி - கோவி மணிசேகரன்

302. மதுரை மன்னர்கள் - கோவி மணிசேகரன்

303. மகுடங்கள் - கோவி மணிசேகரன்

304. மலைய மாருதம் - கோவி மணிசேகரன்

305. மாண்புமிகு முதலமைச்சர் - கோவி மணிசேகரன்

306. மணிமண்டபம் - கோவி மணிசேகரன்

307. மனித மனிதன் - கோவி மணிசேகரன்

308. மனோரஞ்சிதம் - கோவி மணிசேகரன்

309. மயிலிறகு - கோவி மணிசேகரன்

310. மேவார் ராணா - கோவி மணிசேகரன்

311. மிதக்கும் திமிங்கினங்கள் - கோவி மணிசேகரன்

312. முதல் உரிமைப் புரட்சி - கோவி மணிசேகரன்

313. முடிசூட்டு விழா- கோவி மணிசேகரன்

314. முகிலில் முளைத்த முகம்- கோவி மணிசேகரன்

315. நாக நந்தினி- கோவி மணிசேகரன்

316. நந்தி வர்மன் (ராஜ மாதா/நந்தமிழ் நந்தி)- கோவி மணிசேகரன்

317. நாயகன் நாயகி - கோவி மணிசேகரன்

318. நாயக்க மாதேவிகள் - கோவி மணிசேகரன்

319. நிலாக்கனவு- கோவி மணிசேகரன்

320. பத்தாயிரம் பொன் பரிசு- கோவி மணிசேகரன்

321. பெண்மணீயம்/மேகலை/இந்திரவிஹரை - கோவி மணிசேகரன்

322. பொன் வேய்ந்த பெருமாள்- கோவி மணிசேகரன்

323. பூங்குழலி - கோவி மணிசேகரன்

324. பூந்தூது - கோவி மணிசேகரன்

325. பொற்கிழி- கோவி மணிசேகரன்

326. பொற்கால பூம்பாவை - கோவி மணிசேகரன்

327. ராஜ கர்ஜனை - கோவி மணிசேகரன்

328. ராஜ மோகினி- கோவி மணிசேகரன்

329. ராஜ நந்தி - கோவி மணிசேகரன்

330. ராஜ ராகம் - கோவி மணிசேகரன்

331. ராஜ சிம்ம பல்லவன் - கோவி மணிசேகரன்

332. ராஜசிம்மன் காதலி- கோவி மணிசேகரன்

333. ராஜ தரங்கனி- கோவி மணிசேகரன்

334. ராஜ வேசி- கோவி மணிசேகரன்

335. ராஜாளிப் பறவை- கோவி மணிசேகரன்

336. ரத்த ஞாயிறு- கோவி மணிசேகரன்

337. ரூப்மதி/கானல் காணம்- கோவி மணிசேகரன்

338. சாம்ராட் அசோகன் (அசோக சக்ரம்)- கோவி மணிசேகரன்

339. சமுத்திர முழக்கம் - கோவி மணிசேகரன்

340. சந்திரோதயம் - கோவி மணிசேகரன்

341. செம்பியன் செல்வி- கோவி மணிசேகரன்

342. செஞ்சி அபரஞ்சி- கோவி மணிசேகரன்

343. செஞ்சிச் செல்வன்- கோவி மணிசேகரன்

344. சேர சூரியன்- கோவி மணிசேகரன்

345. சேரன் குலக்கொடி - கோவி மணிசேகரன்

346. சுதந்திர தீவில் வெள்ளை நாரைகள் (மறவர் குல மாணிக்கம்/ராணி வேலுநாச்சியார்) - கோவி மணிசேகரன்

347. தலைவன் தலைவி - கோவி மணிசேகரன்

348. தட்சண பயங்கரன் - கோவி மணிசேகரன்

349. தென்னவன் பிராட்டி - கோவி மணிசேகரன்

350. தேரோடும் வீதியிலே - கோவி மணிசேகரன்

351. திருமேனித் திருநாள்- கோவி மணிசேகரன்

352. தியாகத் தேர் - கோவி மணிசேகரன்

353. தோகை மயில் - கோவி மணிசேகரன்

354. தூது நீ சொல்லி வாராய்- கோவி மணிசேகரன்

355. வாதாபி வல்லபி - கோவி மணிசேகரன்

356. வராக நதிக்கரையில் - கோவி மணிசேகரன்

357. வீணா தேவி- கோவி மணிசேகரன்

358. வேங்கை வனம்- கோவி மணிசேகரன்

359. வெற்றி திருமகன் - கோவி மணிசேகரன்

360. கங்கையின் மைந்தன் - கிருஷ்ணப்பிரியன்

361. சாம்ராட் அசோகன் - குகப் பிரியை

362. அம்பலவன் பழுவூர் நக்கன் - குலசேகரன் .எஸ்

363. அந்தி மந்தாரை- குலசேகரன் .எஸ்

364. சோழர்குல பொன்மலர்கள்- குலசேகரன் .எஸ்

365. ஜாம்பவதி- குலசேகரன் .எஸ்

366. சாளுக்கியன் திருமணம்- குலசேகரன் .எஸ்

367. யாழிசை மன்னன்- குலசேகரன் .எஸ்

368. தேனார் குழலி- குலசேகரன் .எஸ்

369. மயூகன் - குமாரசாமி .தா.நா.

370. அரண்மனை அழகிகள் - குமரி மன்னன்

371. பாண்டிய குமரன் - குரும்பூர் குப்புசாமி

372. கன்னிப்பாவை - வே. லட்சுமணன் / மணிவாசகன்

373. நீலவேணி - வே. லட்சுமணன் / மணிவாசகன்

374. பாவை மன்றம் - வே. லட்சுமணன் / மணிவாசகன்

375. கயல் விழி - லக்ஷ்மி ராஜரத்தினம்

376. மட்டுவார் குழலி - லக்ஷ்மி ராஜரத்தினம்

377. பல்லவப் பாவை - லக்ஷ்மி ராஜரத்தினம்

378. சந்தனச் சிற்பம் - லக்ஷ்மி ராஜரத்தினம்

379. கங்கவர்மன் - லக்ஷ்மி நாராயணன் .ய

380. கொங்கு நாட்டுக் கோமான் - லக்ஷ்மி நாராயணன் .ய

381. பொன்னகர் செல்வி - லக்ஷ்மி நாராயணன் .ய

382. பூந்துறை நாயகன் - லக்ஷ்மி நாராயணன் .ய

383. ராஜ ஹம்சம் - லக்ஷ்மி நாராயணன் .ய

384. ராஜ மோகினி - லக்ஷ்மி நாராயணன் .ய

385. ராணி வித்யாவதி - லக்ஷ்மி நாராயணன் .ய

386. தீரன் திப்பு சுல்தான் - லக்ஷ்மி நாராயணன் .ய

387. தியாக வல்லி - லக்ஷ்மி நாராயணன் .ய

388. வன மலர் - லக்ஷ்மி நாராயணன் .ய

389. வெண்முகில் - லக்ஷ்மி நாராயணன் .ய

390. விஜய நந்தினி - லக்ஷ்மி நாராயணன் .ய

391. வில்லவன் தேவி - லக்ஷ்மி நாராயணன் .ய

392. அணையா விளக்கு - லக்ஷ்மி ரமணன்

393. பாதாள நீரோடை - லேனா தமிழ்வாணன்

394. இடுக்கண் களைந்த நட்பு - லூர்து சங்கீதராஜ் .ப

395. திருமாவளவன்/ சோழற்குலச் சூரியன் - மாதவன்

396. விஜயாலயன் - மாதவன் .ஜி

397. சந்திரலேகா - மதுமதி

398. நீல நிலா- மதுரா

399. மஞ்சள் மல்லிகை - மதுரா

400. மஞ்சள் புறா- மதுரா

401. மண்ணுக்கு ஒரு முத்தம்- மதுரா

402. பாஞ்சாலங் குறிச்சி வீரவாள் - மதுரா

403. ராஜா கன்னி- மதுரா

404. மஞ்சள் மாடத்து நிலவு- மதுரா

405. சாணக்கிய சபதம் - மகிரிஷி

406. வஞ்சியின் வஞ்சம் - மகிழ்னன்

407. கடல் கொண்ட காவியம் - மலர்விழி .இரா

408. தெள்ளாறெரித்த நந்திவர்மன் - மணி .இ

409. கடற்பறவை - மானோஸ்

410. பேரழகி லாவண்யா- மானோஸ்

411. பொன்முடியாள்- மானோஸ்



412. பிரமீடுப் பேரழகி- மானோஸ்

413. நாகநாட்டு அரசி குமுதவல்லி - மறைமலை அடிகள்

414. அமிர்தசரஸ் ராணி - மாரிசாமி .எஸ்.எஸ்.

415. வனமாலி - மாரிசாமி .எஸ்.எஸ்.

416. வந்தார்கள் வென்றார்கள் - மதன்

417. கொங்கு நாட்டு தீரன் சின்னமலை - மதியழகன். கே.ஏ

418. மதுராந்தகியின் காதல் - மாயாவி

419. ஆடலரசி - மயில் வாகணன்

420. பொன் மகுடம் - மயில் வாகணன்

421. செம்பியன் செல்வன் - மயில் வாகணன்

422. சோழ நிலா - மேதா.மூ

423. மகுட நிலா - மேதா.மூ

424. கொல்லிப்பாவை - மேதாவி

425. சரபோஜிக் கோட்டை சதி - மேதாவி

426. கே.பி. டி சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

427. நட்பின் விளையாட்டு - மூவேந்தர் முத்து

428. காவிரி நாடன் - முகிலன்

429. ராஜ நந்தி - முகிலன்

430. சாளுக்கியன் சபதம் - முகிலன்

431. வைகையின் மைந்தன் - முகிலன்

432. விஜயதரங்கனி - முகிலன்

433. ஜெய் சோம்நாத் - கே.எம். முன்ஷி

434. மிருனால்வதி - கே.எம். முன்ஷி

435. வீரன் அழகு முத்துக்கோன் - முருகன் .மா

436. கங்காவதி - நாச்சியப்பன். சி.என்

437. புலிக்கேசியை வென்றவன் - நாச்சியப்பன். சி.என்

438. சாணக்கியனை வென்றவள்- நாச்சியப்பன். சி.என்

439. வெற்றித் திருமகள் - நாச்சியப்பன். சி.என்

440. மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும் - நாகராஜன். ஏ.பி

441. கலையரசி - நாகராஜன். ஏ.பி

442. மருக்கொழுந்து மங்கை - ரா.சு. நல்ல பெருமாள்

443. முத்தழகி - நாஞ்சில் மன்னன்

444. காலச்சக்கரம் - நரசிம்மா

445. ரங்கராட்டினம் - நரசிம்மா

446. சங்கதாரா - நரசிம்மா

447. புலிக்கொடி ஏற்றம் - நாராயணசாமி .கோ.பே

448. தளவாய் மண்டபம் - நாராயணசாமி .கோ.பே

449. அடிமையின் காதலி - நாதன்

450. காவியச் செல்வி - நவமணி

451. கிருஷ்ணவம்சம் - நவன்

452. அவள் அன்னியமானவளல்ல - நசீர்

453. காவிய தீபங்கள் - நசீர்

454. ஒரு நிலவு முகம் நினைவு முகம் ஆனது- நசீர்

455. சோழகுலவள்ளி - நெடுமாறன் .பழ

456. தென்பாண்டி வீரன் - நெடுமாறன். பழ

457. குமாரதேவன் - பாகைநாடன்

458. குந்தவையின் கனவு- பாகைநாடன்

459. ஸ்நேகவல்லி- பாகைநாடன்

460. வீரமாதேவி - பாகைநாடன்

461. கந்த குமரன் - பாண்டியன் .கோ

462. பெருந்தேவி - பண்ணன்

463. கபாடபுரம் - பார்த்தசாரதி .நா.

464. மணிபல்லவம் - பார்த்தசாரதி .நா.

465. நித்திலவல்லி- பார்த்தசாரதி .நா.

466. பாண்டிமாதேவி - பார்த்தசாரதி .நா.

467. ராணி மங்கம்மாள்- பார்த்தசாரதி .நா.

468. வஞ்சிமாநகரம்- பார்த்தசாரதி .நா.

469. வெற்றி முழக்கம் - பார்த்தசாரதி .நா.

470. பல்லவனின் காதலி - பார்த்தசாரதி .பா. வே

471. பட்டி விக்ரமாதித்தன் கதைகள் - பாதைமைந்தன்

472. இசைக்கோமகன் - பெருமாள் தே.ப.

473. மன்னன் திருமகள்- பெருமாள் தே.ப.

474. சிற்பியின் கனவு - பெருமாள் தே.ப.

475. தளவாய் வேலுதம்பி - பெருமாள். தே.ப

476. தமிழுக்கு தன்னையே தந்தவன் - பெருமாள் .தே.ப.

477. வஞ்சிக்கோமகள்- பெருமாள் .தே.ப.

478. வீர தீபம் - பெருமாள் .தே.ப.

479. வேணாட்டு வேந்தன் - பெருமாள் .தே.ப.

480. மாவீரன் ஷெர்ஷா - பொன். பத்மநாபன்

481. மகத மகுடம் - பொன். பரமகுரு

482. பீகிங் பேரழகி - பொன். பரமகுரு

483. மராட்டிய மறவன் - பூவை அமுதன்

484. ராணியின் காவலன் - பொன்னுதுரை

485. ஆளப்பிறந்தவன் - பூவண்ணன்

486. பரணர் கேட்ட பரிசு - பூவண்ணன்

487. கண்டராதித்தன் காதல் - பூவண்ணன்

488. கொல்லிமலைச் செல்வி- பூவண்ணன்

489. காந்தளூர் சாலை - பூவண்ணன்

490. பல்லவர் மல்லன் - பூவண்ணன்

491. நரசிம்மவர்மனின் நண்பன் - பூவண்ணன்

492. புலவர் மகன்- பூவண்ணன்

493. ராஜ நட்பு- பூவண்ணன்

494. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

495. வானம் வசப்படும்- பிரபஞ்சன்

496. இன்பக்கேணி - பிரபஞ்சன்

497. கலிங்க நாயகி - புரவலன்

498. அரண்மனை அழகிகள்- இராதா மணாளன்

499. இளவரசி - இராதா மணாளன்

500. மறவர் குலத்து மலர்க்கொடி - இராதா மணாளன்

501. பாண்டியன் திருமேனி - இராதா மணாளன்

502. பூங்கொடி - ரஹீமா

503. நந்திக்கொடி - இராஜா பாலசந்தர்

504. கங்கை சூழ் காவிரி நாடன் - ராஜ ரத்தினம்

505. ராஜ நாயகி – ராஜரத்தினம்

506. சோழ ராணி - ராஜகுரு

507. மாமன்னன் உலா - ராஜகுரு

508. வனதேவியின் மைந்தர்கள் - ராஜம் கிருஷ்ணன்

509. கொற்கை காவலன் - ராஜம் மரகதம்

510. காதல் முற்றுகை - இராஜப்ரியன்

511. இளையவேந்தன் - ராஜசேகரன் .வி.

512. வேண்மாள் - ராஜவேலு .எஸ்.

513. வேழம் கொண்ட வேங்கை - ராஜவேலு .எஸ்.

514. மலையமான் திருமுடிக்காரி -ராஜேந்திரன் கே.ஏ

515. களங்கண்ட அறவோன் - ராமசந்திரன். டி.என்

516. தென்னகப் பேரரசி - இராமச்சந்திரன் டி.என்.

517. வெற்றிதிருநகரின் வீரசிற்பிகள்- இராமச்சந்திரன் டி.என்.

518. ராஜநார்தகி - ராமச்சந்திர தாகூர்

519. சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ

520. அம்பிகாபதி - ராமநாதன். அரு

521. அசோகனின் காதலி - ராமநாதன் .அரு.

522. ராணி மங்கம்மாள்- ராமநாதன் .அரு.

523. வீரபாண்டியன் மனைவி- ராமநாதன் .அரு.

524. வெற்றிவேல் வீரத்தேவன் - ராமநாதன் .அரு.

525. சுல்தானா - ராணிமைந்தன்

526. அடிமையின் காதல் - ரங்கராஜன் .ரா.கி.

527. நான் கிருஷ்ண தேவராயன் - ரங்கராஜன் .ரா.கி.

528. வாளின் முத்தம் - ரங்கராஜன் .ரா.கி.

529. ராஜயோகம் - ராவ். ஜி.வி

530. ஸ்வர்ணமுகி - ராவ் ஜி.வி.

531. ஆதித்தனின் காதல் - ஆர்.வி.

532. செங்கமலவல்லி - ஆர்.வி.

533. புவனமோகினி - எஸ்.எல்,.எஸ்.

534. ராஜ மடல் - சையத்

535. சோழகங்கம் - சக்தி ஸ்ரீ

536. பேரரசியின் சபதம் - சம்பந்தம்

537. அலைஅரசி - சாண்டில்யன்

538. அவனிசுந்தரி - சாண்டில்யன்

539. சந்திரமதி - சாண்டில்யன்

540. சித்ராஞ்சனி - சாண்டில்யன்

541. இளையராணி- சாண்டில்யன்

542. இந்திரகுமாரி- சாண்டில்யன்

543. ஜலதீபம்- சாண்டில்யன்

544. ஜலமோகினி- சாண்டில்யன்

545. ஜீவபூமி- சாண்டில்யன்

546. கடல்புறா- சாண்டில்யன்

547. கடல்ராணி- சாண்டில்யன்

548. கடல்வேந்தன்- சாண்டில்யன்

549. கன்னிமாடம்- சாண்டில்யன்

550. மாதவியின் மனம்- சாண்டில்யன்

551. மலையரசி- சாண்டில்யன்

552. மலைவாசல்- சாண்டில்யன்

553. மங்களதேவி- சாண்டில்யன்

554. மஞ்சளாறு- சாண்டில்யன்

555. மண்மலர்- சாண்டில்யன்

556. மன்னன் மகள்- சாண்டில்யன்

557. மோகனச்சிலை- சாண்டில்யன்

558. மோகினிவனம்- சாண்டில்யன்

559. மூங்கில்கொட்டை- சாண்டில்யன்

560. நாகதீபம்- சாண்டில்யன்

561. நாகதேவி- சாண்டில்யன்

562. நீல்விழி- சாண்டில்யன்

563. நிலமங்கை- சாண்டில்யன்

564. நீலரதி- சாண்டில்யன்

565. நீலவல்லி- சாண்டில்யன்

566. பல்லவபீடம்- சாண்டில்யன்

567. பல்லவதிலகம்- சாண்டில்யன்

568. பாண்டியன் பவனி- சாண்டில்யன்

569. ராணியின் கனவு- சாண்டில்யன்

570. ராஜபேரிகை- சாண்டில்யன்

571. ராஜமுத்திரை- சாண்டில்யன்

572. ராஜதிலகம்- சாண்டில்யன்

573. ராஜயோகம்- சாண்டில்யன்

574. ராஜ்யஸ்ரீ- சாண்டில்யன்

575. ராணா ஹமீர் - சாண்டில்யன்

576. சேரன் செல்வி- சாண்டில்யன்

577. உதயபானு- சாண்டில்யன்

578. வசந்தகாலம்- சாண்டில்யன்

579. விஜயமாதேவி- சாண்டில்யன்

580. விலைராணி- சாண்டில்யன்

581. யவனராணி- சாண்டில்யன்

582. ராஜநார்தகி - சங்கரநாராயணன் .ஆர்

583. ராஜநீதி - சங்கரநாராயணன் .ஆர்

584. ராஜவம்சம் - சங்கரநாராயணன் .ஆர்

585. வீர சிற்பி - சங்கர் ராம்

586. இந்திரதீவு - சாந்தி மீனாட்சி

587. சரித்திர நாயகி - சாந்தி மீனாட்சி

588. பல்லவினி - சாரங்கபாணி .சா.ரா.

589. மோகனாங்கி - சரவண முத்துபிள்ளை

590. கொல்லிமலை இளவரசி - சரோஜா சண்முகம்

591. விக்ரமன் காதலி - சரோஜா சண்முகம்

592. சேந்தமங்கலகோட்டை - சாத்தூர் சேகரன்

593. பாரசிக பைங்கிளி - சவாரி ராஜ்

594. மகாதிரவிடம் - சீதள பக்கிரிசாமி

595. சாணக்கியரும் சந்திரகுப்தனும் - சேனாபதி தா.நா.

596. சோழப் பொன்மகள் - செல்விகாந்த்

597. செம்பியன் தமிழவேள் - செந்தமிழ்சேய்

598. பூங்குழலி - சேரன்

599. ராஜதர்மம் - சேரன்

600. மாவீரன் சத்ரபதி சிவாஜி - சேதுராமன் .கோ.

601. தஞ்சாவூரூ ராணி- சேதுராமன் .கோ.

602. உதய தாரகை - சண்முக சுந்தரம். ஆர்

603. கொன்றயூர் அரசி - சண்முகம்

604. செவ்வானம் - சிந்தார்த்தன்

605. யாதும் ஊரே - சிந்தார்த்தன்

606. சோழவேங்கைகள் - சிந்துபாத்

607. வீர ராணி - சிரஞ்சீவி

608. நாடு கலக்கி வன்னியதேவன் - சிரஞ்சீவி

609. தியாக ராணி - சிற்பி

610. வெற்றி வீரன் மலையமான் - சிவசக்தி

611. ஐம்பொன் மெட்டி - மீ.பா.சோமு

612. கடல் கண்ட கனவு - மீ.பா.சோமு

613. நந்தவனம் - மீ.பா.சோமு

614. ரவிச்சந்திரிகா - மீ.பா.சோமு

615. வென்னிலவுப்பென்னரசி- மீ.பா.சோமு

616. தென்றலரசி - சோதிவாணன் இரா.

617. வேலப்பாடி வேல்விழி - சோதிவாணன் இரா.

618. ஜெய ஜெய பவானி - செளரி ராஜன்

619. ஒரு அமர காதை - ஸ்ரீகுமார்

620. செம்பியர் கோன் - ஸ்டாலின்

621. மானம் காத்த மாவீரன் - சுப்பிரமணியம் .எஸ்.எம்.

622. இசை ஊஞ்சல் - சுப்பிரமணியம் .பேரை

623. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா

624. ரதம் ஒரே நிறம் - சுஜாதா

625. கன்னடியர் மகள் - சுந்தரபாண்டியன்

626. காந்த கீதங்கள் - சுவாமிதாஸ்.த

627. தென்பாண்டி சீமையிலே - சையது இப்ராகிம் ஹமீது

628. இராயரின் காதலி - தகடூரான்

629. நெஞ்சத்தில் நீ - தாமரைக்கண்ணன்

630. அந்தபுரம் - தாமரை மணாளன்

631. இதயவல்லி - தாமரை மணாளன்

632. இந்திரா விழா - தாமரை மணாளன்

633. சிதறிய சலங்கை - தாமரை மணாளன்

634. தேன் மலைக்கன்னி - தாமரை மணாளன்

635. வீர வெண்கல ராஜா - தாமரை செந்தூர்பாண்டி

636. வடலிவிளை செம்புலிங்கம்- தாமரை செந்தூர்பாண்டி

637. அழகிய பல்லவன் - கவிஞர் தமிழரசன்

638. அமைச்சர் திலகம் – தமிழ்ப்பித்தன்

639. களம் கண்ட கவிஞன் - தஞ்சை வாணன்

640. கரிகாற்பெருவளத்தான் - தஞ்சை வாணன்

641. கோபுர கலசம்- தென்னரசு

642. சந்தனத்தேவன் - தென்னரசு

643. சேது நாட்டு செல்லக்கிளி - தென்னரசு

644. செம்மாதுளை- தென்னரசு

645. தைமூரின் காதலி - தென்னரசு

646. துங்கபத்திரை - தென்னரசு

647. குலோத்துங்கன் காதலி - தென்னவன்

648. புலிகேசியின் காதல் – திருவாணன்

649. தீக்குக் கனல் தந்த தேவி - திலகவதி

650. வீரமாதேவி - திருவாசகன்

651. எஸ்.எம்.எஸ்.எம்டன் - திவாகர்

652. திருமலைத் திருடன் - திவாகர்

653. வம்சதாரா- திவாகர்

654. விசித்திரசித்தன்- திவாகர்

655. ஆபுத்திரன் - உதயணன்

656. சோழ குலாந்தகன் - உதயணன்

657. மகாவம்சம் - உதயணன்

658. மானவர்மன் – உதயணன்

659. மயில் கோட்டை - உதயணன்

660. மயில்நிற மங்கை - உதயணன்

661. மௌரிய புயல்- உதயணன்

662. பாண்டிய முரசு- உதயணன்

663. சமுத்திர கோஷம்- உதயணன்

664. சிங்களப் புயல்- உதயணன்

665. ஸ்ரீ முகன் - உதயணன்

666. வேள்வித்தூண்- உதயணன்

667. வெற்றி வேந்தன்- உதயணன்

668. கடல்கோட்டை – உதயணன்

669. பரிமேளழகன்– உதயணன்

670. விஷ்ணு பல்லவன்– உதயணன்

671. ஈழத்தின் கதை - வாஸ் கே.வி.எஸ்.

672. செம்பியர் திலகம் - வடிவேலு

673. கலிங்க நிலா - வைத்தியநாதன் .ஞான

674. வில்லோடு வா நிலவே - வைரமுத்து

675. பாண்டியன் குழலி - வரதராஜன். டி.பி

676. வெற்றியைத் தேடி - வசந்த நாயகன்

677. சங்கர பதிக்கோட்டை - வாசவன்

678. வீர சோழன் மகள் - வாசவன்

679. வேங்கையின் பேரன் - வெய்குழல் வேந்தன்

680. புலிப் பாண்டியன் - வேலவன்

681. கோப்பெருஞ்சிங்கன் கனவு - வேல்முருகன் .எஸ்.

682. காவல் கோட்டம் - வெங்கடேசன் .சு.

683. கள்ளழகர் காதலி - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

684. கூவாய் நதி தீரம் - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

685. மன்மத பாண்டியன்- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

686. மோகவல்லி தூது - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

687. மோகினி திருக்கோலம்- வேணுகோபாலன்/புஷ்ப்பா தங்கதுரை

688. சரித்திர காலத்து காதல் கதைகள்-வேணுகோபாலன்/புஷ்ப்பா தங்கதுரை

689. ஸ்வர்ணமுகி- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

690. திருவரங்கன் உலா- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை

691. குண்டலகேசி - வேணுகோபாலன் .வ

692. மாருதியின் காதல்- வேணுகோபாலின்.வ

693. ராஜ சிம்மன் - வேணுகோபாலின்.வ

694. குறள் கண்ட சோழன் - வெற்றிச்செல்வன் எஸ்.ஏ

695. அரண்மனை ரகசியம் - விஜய்

696. அபிமானவல்லி - விக்ரமன்

697. ஆலவாய் அரசி - விக்ரமன்

698. சித்ரவல்லி / தியாகவல்லாபன் - விக்ரமன்

699. சோழ மகுடம் - விக்ரமன்

700. சோழ இளவரசன் கனவு - விக்ரமன்

701. கங்கபுரி காவலன் - விக்ரமன்

702. கடல் மல்லைக் காதலி - விக்ரமன்

703. காஞ்சிக் காவலன் - விக்ரமன்

704. காஞ்சி சுந்தரி - விக்ரமன்

705. கன்னிக்கோட்டை இளவரசி - விக்ரமன்

706. குலோத்துங்கன் சபதம் - விக்ரமன்

707. கொன்றை மலர் குமரி- விக்ரமன்

708. கோவூர் கூனன் - விக்ரமன்

709. மதுரை மகுடம்- விக்ரமன்

710. மங்கலதேவன் மகள்- விக்ரமன்

711. மாணிக்க வீணை- விக்ரமன்

712. மாறவர்மன் காதலி- விக்ரமன்

713. நாச்சியார் மகள்- விக்ரமன்

714. நந்திபுரத்து நாயகி- விக்ரமன்

715. பாண்டிய மகுடம்/பகைவனின் காதலி/ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்- விக்ரமன்

716. பராந்தகன் மகள்- விக்ரமன்

717. பரிவாதினி- விக்ரமன்

718. பெரிய பிராட்டி – விக்ரமன்

719. ராஜராஜன் சபதம் - விக்ரமன்

720. ராஜதித்தன் சபதம்- விக்ரமன்

721. ரதினஹாரம்- விக்ரமன்

722. தெற்குவாசல் மோகினி- விக்ரமன்

723. உதயச்சந்திரன்- விக்ரமன்

724. வாதாபி விஜயம்- விக்ரமன்

725. வல்லத்து இளவரசி- விக்ரமன்

726. வந்தியத்தேவன் வாள்- விக்ரமன்

727. வஞ்சிநகர் வஞ்சி- விக்ரமன்

728. யாழ்நங்கை (பாடினியின் காதலன்)- விக்ரமன்

729. வேங்கடநாத விஜயம் -விஷ்ணுவர்தன்

730. பத்மவியுகம் / ஜெயஸ்ரீ - விஷ்வக்சேனன்

731. இந்திர தனுசு- விஷ்வக்சேனன்

732. மகுட வைரம்- விஷ்வக்சேனன்

733. பாண்டியன் மகள்- விஷ்வக்சேனன்

734. செங்கதிர்மாலை- விஷ்வக்சேனன்

735. அதியரை நங்கை - விவேகானந்தன் .மு

736. அலைகடலுக்கு அப்பால் - விவேகானந்தன் .ந.

737. ஓவியத்தேவி - விவேகானந்தன் .ந.

பிடித்தது :)