Sunday, December 11, 2011

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !! - மகாகவி பாரதியார்

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !!
மகாகவி பாரதியார்



நம் மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று!!! (டிசம்பர் 11 2011)
வாழ்த்துக்களுடன் வணங்குகிறோம்!!!


இனிய காணொளி..!




செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 
   சக்தி பிறக்குது மூச்சினிலே!          (செந்தமிழ்) 

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் 
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல 
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் 
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
    கண்டதோர் வையை பொருனை நதி - என 
மேவிய யாறு பலவோடத் - திரு 
    மேனி செழித்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று 
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் 
எத்தனையுண்டு புவிமீதே - அவை 
    யாவும் படைத்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று 
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட 
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் 
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு!          (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் 
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல 
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் 
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!          (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து 
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி 
    யாரம் படைத்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய 
   தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று 
    சால்புறக் கண்டவர் தாய்நாடு          (செந்தமிழ்)

 விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் 
    வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் 
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் 
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு!          (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும் 
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை 
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக 
    நன்று வளர்த்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

Saturday, December 10, 2011

பாவேந்தரும் தமிழும்


பாவேந்தரும் தமிழும்
E

    ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
     மங்காத தமிழென்று சங்கே முழங்கு’
(சங்கநாதம்: 1-2)

எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.
தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.

1.1.1 தமிழ் உயிர்போன்றது
தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே,

    செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !
    செயலினை மூச்சினை உனக்களித்தேன்
(பாரதிதாசன் இசையமுது, தமிழ்: 5)

என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.

• தமிழெனும் அமிழ்தம்
பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா ! என்ன சுவை ! என்ன சுவை ! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே

    தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ்
    இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
(இன்பத் தமிழ்: 1-2)

என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!

• தமிழெனும் உயிர்
இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது. தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள் -

காட்சி

    கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்     கழையிடை ஏறிய சாறும்,     பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்     பாகிடை ஏறிய சுவையும்,    நனிபசு பொழியும் பாலும் - தென்னை     நல்கிய குளிரிள நீரும்,     இனியன என்பேன் எனினும் - தமிழை     என்னுயிர் என்பேன் கண்டீர் !
(பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி 19.
தமிழின்இனிமை, முதல் பாடல்)

(கழை = கரும்பு)
என்ன நண்பர்களே! “எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன? தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’ - இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர்
கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா! 
வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை,
இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது.
“சோலையினுள் மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute) ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும் கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய முடியாது. ஏன் என்றால், தமிழும்
நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,

    தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்
(பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி 19.
தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று பறைசாற்றுகின்றார்.

    தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும்     தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே
(பாரதிதாசன் கவிதைகள் முதல்பகுதி 23.
எங்கள் தமிழ், வரிகள்: 9 - 10)

ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான். அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.

1.1.2 தமிழின் இனிமை
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள் ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம் நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம் தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும் இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
தமிழுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,

    இன்பம் எனப்படுதல் - தமிழ்     இன்பம் எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக.
(முதல் பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 - 37)

என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு. தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
தமிழ் என்ற உடனே, இன்பம் தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும் என்று கூறுகிறார்.
(கிட்டுதல் = அடைதல், கிட்ட = அடைய)
இயற்கையில் அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப் பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும்.
தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,

    இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு     இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது !
(முதல் தொகுதி, 23. எங்கள் தமிழ் - வரிகள்: 1 - 2)

என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன்.



நன்றி: http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114101.htm

Wednesday, December 7, 2011

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. 
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது 
வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான். 
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க, 
திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு. 

சரியா சோறே போடறதில்லை, 
இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. 
அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், 
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. 
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான். 
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி 
ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. 
கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, 
கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் 
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு 
வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான். 
அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான். 
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.

கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட 
இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். 
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. 
நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்



Sunday, December 4, 2011

சில்லறை வனிகத்தில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு- அடி அல்ல நம் தலையில் விழ போகும் இடி

PLEASE READ AND SHARE-FOR TRUE INDIANS (Courtesy: A friend's post):
 

சில்லறை வனிகத்தில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு- அடி அல்ல நம் தலையில் விழ போகும் இடி:-

முப்பது வருடங்களுக்கு முன் கோக் மற்றும் பெப்ஸியை இந்தியாவை விட்டே விரட்டினோம். ஆனால் கோடிகள் கை மாறியதும் வரவேற்றார்கள் நம் ஈன தலைவர்கல். அவர்களும் வந்தார்கள். அதன் பின்னர் அவரகள் அடைந்தது லாபம் மட்டும் அல்ல. தங்கள் லாபங்களுக்கு இடைஞ்சலாக இருந்த உள் நாட்டு நிறுவனங்களை அழித்ததும் தான்.

நேற்று பொது துறை எண்ணை நிறுவனங்கள் அரசை சார்ந்து இருக்க தேவை இல்லை என்றனர். விளைவு 15 நாளுக்கு ஒரு முறை பெட்ரோல், டீஸல் விலை ஏட்ரம்.

இன்று சில்லறை வனிகத்தில் அன்னிய முதலீட்டை 51 % மும் ஒரு பொருளின் வர்த்தகத்தில் 100 % மும் ஊழலல்கள் மலிந்த இந்திய அரசு அனுமதித்து விட்டது. அதனால் வால்மார்ட், டெஸ்கொ போன்ற அன்னிய பூதங்கள் இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் தொடங்க முடிவு செய்து விட்டன.

சில்லறை வணிகத்தில் அன்னிய நிருவனங்கள் நுழைந்தால் தான் விலைவாசி குறையும் என்று இந்த நல்லரசு(?) கருதுகிரது. இது அரசின் கையலாகாதத்தனத்தையும், முட்டாள்தனத்தையும் தான் காட்டுகிரது.

அன்னிய நிறுவனங்கள் முதலில் விலையை குறைத்து விற்றுவிட்டு பின்னர் உள் நாட்டு வியாபாரிகளை அழித்துவிட்டு முடிந்த வரை விலையை ஏற்றுவார்கள் என்பதை ஏன் இந்த முட்டால்களின் அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது.

கிரிக்கெட் வீரர்களும் சினிமா நட்சத்திர நாய்களும் பல கோடிகலை வாங்கி கொன்டு இந்திய வணிகர்கலை அழிக்கும் அவர்களின் விளம்பரத்தில் நடிப்பார்கல். எம் அறிவாளி ரசிகர்களும் அந்த பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பார்கள். இது வரை யாராவது ஒரு கிரிக்கெட் வீரரோ நட்சத்திர நாயோ பணம் வாங்காமல் ஒரு உண்மையான இந்திய பொருளை விளம்பரப்படுத்தி இருக்கிறார்களா?.

இந்த புதிய திட்டத்தால் நிறைய வேலை கிடைக்கும் என்கிறார்கள். முதலாளிகளாக இருக்கின்ற நம் இந்தியர்கள் இனி அவர்களிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமைகளாக கை கட்டி வாய் பொத்தி நிற்கும் அவல நிலை வந்து விடும்.

எவன் எக்கேடு கெட்டால் என்ன?. நான் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும், பணக்கார முதலைகளும் இருக்கின்ற நாட்டில் பிறந்ததிற்காக பெருமைப்படுகிறேன்(!)..

எச்சரிக்கை!! சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு நாட்டிற்கு ஆபத்தானது..எப்படி?.. தமிழ் விளக்கக்காட்சி வடிவம்..

தயவு செய்து படித்துவிட்டு மறு பகிர்வு செய்யவும்..

https://docs.google.com/open?id=0B-eXb2AuPEmIYmFjNTgyOTktOWRjMS00ZjZmLWE5ZGQtNTEyZmFjMGZmMGRl

Saturday, December 3, 2011

எச்சரிக்கை!! சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு நாட்டிற்கு ஆபத்தானது..எப்படி?





எச்சரிக்கை!! சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு நாட்டிற்கு ஆபத்தானது..எப்படி?.. தமிழ் விளக்கக்காட்சி வடிவம்..

https://docs.google.com/open?id=0B-eXb2AuPEmIYmFjNTgyOTktOWRjMS00ZjZmLWE5ZGQtNTEyZmFjMGZmMGRl

தயவு செய்து படித்துவிட்டு மறு பகிர்வு செய்யவும்..

நன்றி..

Wednesday, November 30, 2011

கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறு? ஒரு தொகுப்பு


கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறுஒரு தொகுப்பு

கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான அணு விஞ்ஞானிகள் இருப்பதாக அணு மின் துறை கூறுகிறது. போகிற போக்கை பார்த்தால்அணு உலைகளை குளிர்விப்பது போல,கூடங்குளத்தை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களுக்கும்விஞ்ஞானி பட்டத்தை கொடுத்து அவர்களையும் குளிர்விக்க அரசு முயற்சி செய்தாலும் செய்யலாம். விஞ்ஞானி பட்டமும் இப்போது டாக்டர் பட்டம் போல ஆகிவிட்டது.

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள்அணு உலைகள்  பாதுகாப்பானவை என்று பல விளக்கங்களை கூறுகின்றனர். முனைவர் உதயகுமார் இவர்களை போலி விஞ்ஞானிகள்இவர்கள் சொல்வது போலி விஞ்ஞானம் என்கிறார். இவர்கள் அனைவரும் விஞ்ஞானிகள் என்றால்மனித இனத்திற்கு தினமும் பயன்படும் பல  அரிய  பொருள்களை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐசக் நியூட்டன் போன்றவர்களை எப்படி அழைப்பது?. அது கிடக்கட்டும்.  ஆனால்அந்த காலத்து கவர்ச்சி அணு குண்டுகளை பற்றி மட்டுமே தெரிந்த   எனக்கு இந்த அணு உலைகள் குறித்து ஒன்றும் தெரியாது. இருப்பினும்அம்மாஞ்சி அப்பாவியான எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது. அவை கீழே:

வாதம் 1 :- கூடங்குளம் அணு உலைகள் தரமாக கட்டப்படவில்லை. தரம் குறைந்த கலப்பட பொருட்களை கொண்டு ( சில வருடங்களுக்கு  முன்னர் கூடன்குளம்  கட்டுமானத்திற்கு  ஆற்று ணலுடன்  கடல் மணலும் கலக்கபட்டு  இருந்ததை மாவட்ட கலெகடர் கண்டுபிடித்து நிறுத்தி வைத்து  இருந்தது செய்திஇடிந்தகரையை சேர்ந்த ஒருவர் முழு உலையும் கடல் மண்ணால் மட்டுமே குழைத்து பூசி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது,இன்றைய புதிய தலைமுறை T .V   செய்தி ) பாதுகாப்பற்ற முறையில் கட்டப்படுள்ளன. இந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்று அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். பேரறிஞர்பல்துறை  விஞ்ஞானி அப்துல் கலாமும் இதை வழி மொழிந்துஇந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE -ஐ தாங்கும் வல்லமை படைத்தவை என்று நற்சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இதில் கூத்து என்ன என்றால்,  அனுபவ அறிவின் மூலம் வீடுகள் கட்டும்,நமது கொத்தனார்கள் கட்டும் நமது வீடுகளே ஆறுRICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்பது தான்.

பெரு நகரங்களில் ஒன்பது RICHTER SCALE -ஐ தாங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

குஜராத்ஜாம் நகரில் அமைந்துள்ள RELIANCE REFINERY , ஒன்பது RICHTER SCALEநிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான்,குஜராத்தில் 2001  -ம் ஏற்பட்ட 7 .4 நில நடுக்கத்தை அது தாங்கி நின்றது. செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


ஒரு தனியார் நிறுவனத்தால்பத்து வருடங்களுக்கு முன்னர்,ஒன்பது RICHTER SCALE அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்க இயலும் போது,  ஆயிரகணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டு REFINERY வளாகம் அமைக்க இயலும் போதுஒரு மத்திய அரசு நிறுவனத்தால்ஏன் ஒன்பது RICHTER SCALE நில நடுக்கம் தாங்கும் அணு உலைகளை  அமைக்க இயலவில்லை?. அல்லதுஅதிக ஆபத்து இல்லாத வீடுகளும், REFINERY வளாகமும்   ஒன்பது RICHTER SCALE -இல் அமைக்கப்படும்போதுஅதிக ஆபத்து நிறைந்த அணு உலைகள் 12 RICHTER SCALE -இல் அமைக்கப்பட வேண்டாமா?

ஆறு RICHTER SCALE என்பது ஒன்றுமே இல்லை. கடந்த 8 -ம் தேதி அன்றுவட மாநிலங்களில் ஆறு RICHTER SCALE நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தின தந்தியில்மூன்றாவது பக்கம் கடைசியில் ஒரு சிறிய செய்தி.மக்கள் பூமி அதிர்ச்சியை உணர்ந்தனர். உயிர்  சேதம் ஏற்படவில்லை என்று. இதில் கட்டிடங்கள் இடியவில்லை. 9 -ம்  காலை ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் 6 .8 RICHTER என்றும் கட்டிடங்கள் குலுங்கின என்றும் செய்தி சொல்லுகிறது. இதிலும் கட்டிடங்கள் இடியவில்லை.

ஆக, 6 -க்கு மேலே நில நடுக்கம் என்றால்நமது வீடுகள் ஒரு குலுங்கு குலுங்கும். ஆனால்கூடங்குளம் அணு உலைகள் வாய் பிளந்து விடும். அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?

அணுமின் நிலையம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் 13 -ம் தேதி   தெரிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி டெல்லியில் இதனைத் தெரிவித்தார் ஆககூடங்குளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை,மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

செய்தியை வாசிக்க கீழே சொடுக்கவும்

கூடங்குளத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்எரிமலை வெடித்துள்ளது என்பது புவியியல் ஆய்வாளர்கள் கருத்து. அப்போது வெளிப்பட்ட லாவா குழம்புசுண்ணாம்பு கல்லாகிஇப்போதும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான்தாளையூத்து சங்கர் சிமின்ட் கம்பனிக்கு சுண்ணாம்பு கல் கொண்டு செல்லப்படுகிறது.

L &  T போன்ற சிறந்த கட்டுமான நிறுவனத்திற்கு கூடங்குளம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. அதை விடஅணு மின் துறை அதை மேற்பார்வை செய்யும் லட்சணம் அதை விட சிறந்தது. கர்நாடக மாநிலம் KAIGA -வில்  கட்டப்பட்ட அணு உலை DOME 1994 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கட்டுமானத்தின் போது இடிந்து  நொறுங்கி விழுந்தது அதற்கு சான்று. STRUCTURE STANDARD -க்கு வேறு உதாரணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். கூடன் குளம், STANDARD -ம் இது தான்.  கலப்பட பொருள்களை கொண்டு கட்டப்பட்ட இந்த உலைகள்,  ஏனோ இந்த மழைக்கு  DOME விழவில்லை. அடுத்த மழைக்கு பார்க்கலாம்.

KAIGA -வில் DOME இடிந்த செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


இது தான்இநதிய அணு மின் துறையின் மிக சிறந்த கட்டுமானத்திற்கு சான்று.

சமீபத்தில் பெய்த மழையால்வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதாகநெல்லை கலெக்டர் கூறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து வளாக உயரம் ஆறுஏழு மீட்டர்ஒன்பதரை மீட்டர் என்று புலிகேசிகள் பீலா விடுகிறான்கள்.
 
இந்த உயரங்கள் உண்மை என்றால் ஏன் வளாகத்தில் உள்ள தண்ணீர் வடியவில்லை?அல்லதுஇதை அணு மின் துறையின் உயர் தரமான கட்டுமானத்திற்கு ஒரு சான்றாக எடுத்து கொள்ளலாமா? 
கடல் அருகில்குறைந்தது ஆறு மீட்டர் உயரத்தில் இருக்கும் வளாக மழை நீரை வடிக்கவடிகால் கட்ட தெரியாதவன்கள்,அணு உலை கட்டுகிறான்கலாம்அதுவும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன்! நல்ல நகைசுவை.

பல் துறை விஞ்ஞானி அப்துல் கலாமின் பல்துறை உதவியாளர் பொன்ராஜ் இப்போதே கூடங்குளம் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூற துவங்கி விட்டார்.

கூடன்குள எதிர்ப்பு போராட்டத்திற்கு கரரணம் NUCLEAR DISASTER காரணம் அல்ல என்றும்நிர்வாகத்தின் PR DISASTER ( PUBLIC RELATIONS )  தான் காரணம் என்றும் கூறுகிறார்.

அணு உலை TRIAL TEST நடந்த போதுமிக பலமான சத்தம் எழுந்ததற்கு காரணம்,நிர்வாகம் அந்த பரிசோதனையை இரவில் நடத்தியது தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.
ஆனால்பகலில் தான் இந்த பரிசோதனை நடந்துள்ளது.

அணு உலைகள் வெடித்த பின்னர்இவரை போன்றவர்கள் டெல்லியில் இருந்து கொண்டுநிர்வாகம் அந்த தவறை செய்ததுஇந்த தவறை செய்தது. அதனால் அணு உலைகள் வெடித்து விட்டன என்று பேட்டிகள் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

 ""வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்''

இயற்கையை முழுமையாக கணித்து இயந்திரங்களை படைப்பவன் இன்னும் பிறக்கவும்  இல்லை. பிறக்க போவதும் இல்லை.

உப வாதம்:- கடந்த இரண்டு மாதமாக நடந்து வரும் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று சகல வல்லமை படைத்த உளவு துறை நிறுவனங்களை தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும்,மத்திய அரசு மயிரை பிய்த்து கொண்டு இருக்கிறது.

ஒரு மிக சிறிய சந்தேகம் என்ன என்றால்இநதிய சுதந்திர போராட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்ததே?. அப்போதுகாந்திக்கும்காமராஜிக்கும் இன்ன பிற தலைவர்களுக்கும் பணம் கொடுத்தது யார்?. அதுவும் அமெரிக்கா தானா?

நன்றி: ஒரு நண்பரின் மின்னஞ்சல்

பிடித்தது :)