Sunday, December 11, 2011

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !! - மகாகவி பாரதியார்

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !!
மகாகவி பாரதியார்



நம் மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று!!! (டிசம்பர் 11 2011)
வாழ்த்துக்களுடன் வணங்குகிறோம்!!!


இனிய காணொளி..!




செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 
   சக்தி பிறக்குது மூச்சினிலே!          (செந்தமிழ்) 

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் 
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல 
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் 
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
    கண்டதோர் வையை பொருனை நதி - என 
மேவிய யாறு பலவோடத் - திரு 
    மேனி செழித்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று 
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் 
எத்தனையுண்டு புவிமீதே - அவை 
    யாவும் படைத்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று 
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட 
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் 
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு!          (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் 
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல 
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் 
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!          (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து 
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி 
    யாரம் படைத்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய 
   தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று 
    சால்புறக் கண்டவர் தாய்நாடு          (செந்தமிழ்)

 விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் 
    வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் 
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் 
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு!          (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும் 
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை 
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக 
    நன்று வளர்த்த தமிழ்நாடு!          (செந்தமிழ்)

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)