Wednesday, August 29, 2012

சொன்னது நீதானா..??

ஒவ்வொரு வரியிலும் உணர்ச்சி பொங்கும் இனிய இசையுடன் கூடிய பைந்தமிழ்ப் பாடல்.. :)

"ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா..
ஒரு மனதில் ஓருமுறைதான் வளரும் உறவல்லவா.."

-- அருமைத்தமிழ்ப் பண்பாட்டைப் பாடுகிற பண்...

சதிராடு தமிழே நீயாடு..

இப்படியும் ஒரு காதல் பாட்டு, கிராமிய ரொமான்ஸ் கமழ, தமிழ் உண்மையிலேயே சதிராடுது. இந்த simple perfection, இன்னைக்கு இருக்கற காதல் பாட்டுக்கள் எல்லாம் பிச்சை வாங்கணும். look at how the balance between the wild and the civilized dances through the song, its like saddling a crazy wild horse and winning a race with poise!  this truly is the desired essence of man, sublime divinity emerging out of raw emotions. இதுக்கு மேல மனுஷனுக்கு இசை வேணுமா அப்டின்னு கேக்க வைக்கிது.


பாடல் வரிகள்:

கட்டோடு  குழலாட  ஆட..  ஆட..
கண்ணென்ற  மீனாட  ஆட..  ஆட..
கொத்தோடு  நகையாட  ஆட..  ஆட..
கொண்டாடும்  மயிலே  நீயாடு
                                 (கட்டோடு  குழலாட..)

பாவாடை  காற்றோடு  ஆட..  ஆட
பருவங்கள்  பந்தாட  ஆட  ஆட..
காலோடு  கால்  பின்னி  ஆட  ஆட..
கள்ளுண்ட  வண்டாக  ஆடு
                                 (கட்டோடு  குழலாட..)

முதிராத  நெல்லாட  ஆட..  ஆட..
முளைக்காத  சொல்லாட  ஆட..  ஆட..
உதிராத  மலராட  ஆட..
சதிராடு  தமிழே  நீயாடு
                                 (கட்டோடு  குழலாட..)

தென்னை  மரத்  தோப்பாக..  தேவாரப்  பாட்டாக..
புன்னை  மரப்  பூச்சொரிய  சின்னவளே  நீயாடு
கண்டாங்கி  முன்னாட..  கன்னி  மனம்  பின்னாட..
கண்டு  கண்டு  நானாட..  செண்டாக  நீயாடு..  செண்டாக  நீயாடு..
                                 (கட்டோடு  குழலாட..)

பச்சரிசிப் பல்லாட.. பம்பரத்து  நாவாட..
மச்சானின்  மனமாட  வட்டமிட்டு  நீயாடு..
வள்ளி  மனம்  நீராட..  தில்லை  மனம்  போராட..
ரெண்டு  பக்கம்  நானாட  சொந்தமே  நீயாடு.. சொந்தமே  நீயாடு..
                                 (கட்டோடு  குழலாட..)

நன்றி: http://gskg.wordpress.com/2010/12/22/முளைக்காத-சொல்-ஆட-ஆட/

மாற்றங்கள்: பாடல் வரிகள் திருத்தப்படன.

பிடித்தது :)