Thursday, September 27, 2012

பொன்னியின் செலவனின் அளவும் ஒலி வடிவமும்

அன்பர்களுக்கு வணக்கம்..
யாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அளவை என்றும் கணக்கில் கொள்ள அவசியமில்லை.. ஏனெனில், அதன் முதல் இரு அத்தியாயத்தைப் படித்த பின், அதைப் படித்த நேரமும் பக்கங்களின் அளவும் தெரியாமல் படிக்க ஆரம்பித்திடுவோம்.. முதல் முறை படிக்கும்போது பல சமயம் அதன் சுவைமிகுதியால் ஒரே நாளில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த அனுபவம் எனக்குண்டு. பல நாட்கள் இரவு அசதி மிகுதியால் எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் படித்திருக்கின்றேன். அதைக் கையிலிருந்து கீழே வைக்கும்போது, ஒரு காதலன் தன் காதலியைப் பிரியும்போது இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணியிருக்கின்றேன். 

நானும் பொன்னியின் செலவனின் ஒலி/ஒளி வடிவத்தை முதலில் எதிர்பார்த்தவன் தான். பின்பு அதை முதன்முறை முழுதாய்ப் படித்தபின், அவ்வாறு நாம் படிப்பதன் மூலமாகத்தான் அந்த கதாப்பாதிரங்களின் உரையாடலில் வரும் காடசிகளையும் உணர்ச்சிகளையும் நம்மால் நூறு சதம் உணரமுடியுமேயன்றி, வேரொருவர் வாய்மொழியால் அவ்வாறு உணர முடியாது என்பதை உணர்ந்தேன். இப்பொது நான் இரண்டாம் முறை படித்து முடிக்கப் போவதால், இந்த ஒலி வடிவம் என் பொன்னியின் செல்வன் கதை பற்றிய கற்பனைகளை மாற்றாது என்பதை உணர்வதால், ஒலிவடிவில் உள்ள சுவைகளை உணர அதைக் கேட்கவுள்ளேன். அத்தகைய ஒலி வடிவத்தை திரு. ஸ்ரீ அவர்கள் நல்ல பாராட்டத்தக்க வகையில் தந்துள்ளார்கள்..

முதன்முறைப் படிப்பவர்கள் முதலில் அதை தாமாகப் படித்துணர்ந்த பின்பே ஒலி வடிவத்தைக் கேட்டால்தான் அதன் முழு சுவையையும் நம்மால் உணர முடியும். முதலில் அதன் முதலிரு அத்தியாயங்களைப் படித்திருங்கள், பின்பு, அதைப் படிக்க நேரமில்லை என்பது போய், அதைப் படித்த நேரம் இவ்வளவு என்று தெரியாமல் போகும். படித்து முடிக்கும்போது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றும் தோன்றும்.. பின்பு அதன் ஒலிவடிவத்திற்கு நிச்சயம் வரலாம் என்பது என் கருத்து.

நன்றிகள்..

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)